தமிழ்நாடு

தானியங்கி பட்டா மாறுதல் இனி 15 நாட்களில்! – அமைச்சர் செங்கோட்டையன்

ஆட்டோமேஷன் முறையில் பட்டா மாறுதல் – பொதுமக்களுக்கு நற்செய்தி

நில பதிவு மற்றும் வருவாய் துறை சார்ந்த பணிகளை எளிமைப்படுத்தும் வகையில், தானியங்கி பட்டா மாறுதல் முறை மேலும் வேகப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.


அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
15 நாட்களில் நடைமுறை தானியங்கி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் 15 நாட்களுக்குள் முடித்து வழங்கப்படும் ஆட்டோமேஷன் முறை பெருவாரியான பட்டா மாறுதல்கள் இனி ஆட்டோமேஷன் முறையில் செய்யப்படும். இதனால் தாமதம் குறையும்.வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டும் சொத்தின் மீது எந்த விதமான வில்லங்கமும், நிலுவையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே தானியங்கி பட்டா மாறுதல் செய்யப்படும்.பொதுமக்களுக்கு பயன் இதுவரை மாதக்கணக்கில் இழுத்த பட்டா மாறுதல் பணிகள் இனி 15 நாட்களில் முடியும் என்பதால், வீடு, மனை, விவசாய நிலம் வாங்குபவர்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதி. லஞ்சம், அலைச்சல் குறையும் என எதிர்பார்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:
தானியங்கி பட்டா மாறுதலுக்கு http://tnreginet.gov.in அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம், வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.வில்லங்க சான்றிதழ், பத்திரம், அடங்கல் போன்ற அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே 15 நாட்களில் பட்டா கிடைக்கும். ஏதேனும் பிரச்சனை இருந்தால் வருவாய் அலுவலர் விசாரணைக்கு பிறகு வழங்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button